காஞ்சிபுரம் அருகே சோகம்.! மகள் இறந்த துயரத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகள் இறந்த துயரத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பானுமதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி. இந்நிலையில் கணேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் பானுமதி தனது ஒரே மகள் பாக்கியலட்சுமியை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். 

இதையடுத்து 9ஆம் வகுப்பு படித்து வந்த பாக்கியலட்சுமி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த பானுமதி மகள் இறந்த துயரம் தாங்காமல், நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டை உடைத்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother suicide in kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->