87.5 சவரன் நகை திருட்டு வழக்கில் தீர்ப்பு…! - தஞ்சையில் குற்றவாளிகளுக்கு கடும் சிறை தண்டனை...!
87point5 Sovereign jewel theft case verdict Heavy prison sentence culprits Thanjavur
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
தஞ்சையில் உள்ள அவரது இல்லத்தில், மனைவி ஜோதிமணி வெளியூர் சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, வீட்டின் பூட்டை உடைத்து 87.5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி, 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வேட்டையாடினர்.
இந்த விசாரணையில் தர்மபுரியைச் சேர்ந்த சகோதரர்கள் மொய்தீன் (37), ஷாஜகான் (28) மற்றும் அவர்களது சகோதரி ஆயிஷாபர்வீன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.இந்த வழக்கு தஞ்சை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி பிரபுராம் இறுதி தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, முக்கிய குற்றவாளிகளான மொய்தீன் மற்றும் ஷாஜகானுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட ஆயிஷாபர்வீனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பு, திருட்டு வழக்குகளில் சட்டம் எவ்வாறு கடுமையாக செயல்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
English Summary
87point5 Sovereign jewel theft case verdict Heavy prison sentence culprits Thanjavur