மகனை கொன்று தாய் தற்கொலை.. காரணம் என்ன?
Mother commits suicide after killing her son What is the reason?
1½ வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு காந்திபுரத்தை சேர்ந்த தம்பதி கவின்குமார் ,அமராவதி . இவர்களுக்கு 1½ வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை இருந்தது.நேற்று முன்தினம் இரவு குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தம்பதி இருவரும் தூங்கினர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அருகே தூங்கிக்கொண்டு இருந்த மனைவி அமராவதி சமையல் அறை விட்டத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் கவின்குமார்
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாிசோதனை செய்த டாக்டர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே தொட்டிலில் இருந்த குழந்தையும் அசைவற்ற நிலையில் இருந்ததால் அதே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பிறகு ஏன் அமராவதி குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை. கடன் தொல்லையா? அல்லது அமராவதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
Mother commits suicide after killing her son What is the reason?