குடும்ப பிரச்சனை காரணமாக மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு... விருதுநகரில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்தவர் பழனி வைப்பதற்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். பழனிவேல் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் , சம்பதன்று முதல் நாள் இருவருக்குமிடையில் கோவிலுக்கு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பழனிவேல் மகாலட்சுமி அடித்துள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று நள்ளிரவு தனது மகள் கஜலட்சுமி அழைத்துக் கொண்டு அங்குள்ள தெப்பகுளத்திற்கு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து தாயும் மகளும் குளத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறி உயரமான கம்பி வேலியை தாண்டி களத்தில் குதித்துள்ளனர். மறுநாள் அவர்களின் உடல் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother and daughter committed Suicide


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->