அன்னையர் தினத்தன்று, தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.!!
Minister vijayabasker wish mothers day
அன்னையர் தினம் மே மாதம் 10 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த 2020 வருடத்திற்கான அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் கொரோனா காரணமாக விழாக்கோலங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வீடுகளில் இருந்தபடியே அன்னையர் தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. முகநூல், வாட்சப், ட்விட்டர், இன்ஸ்டா, ஹெலோ என்று எந்த செயலி பக்கம் சென்றாலும் பாடல், கவிதை என்று குவிந்த வண்ணம் இருக்கிறது.
தனது குடும்பத்திற்காக தினமும் பல கஷ்டத்தை படும் தந்தை ஒருபுறம் என்றால், தாயும் மற்றொரு புறம் தனக்கான பல பணிகளை செய்து, குடும்பத்தின் வளர்ச்சியை எண்ணுவதில் குடும்ப தலைவனை விட மேலானவளாகவும் இருந்து, குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்த அழகிய ஜீவன்..
அம்மாவிற்கு அனுதினமும் மரியாதையை செலுத்திக்கொண்டே இருந்தாலும் போதாது என்ற நிலைதான் உலகின் அணைத்து நாடுகளிலும் என்ற சூழ்நிலை இருக்கும் நிலையில், ஒரு நாலாவது அன்னையை சிறப்பிக்க வேண்டும் என்று அன்னையர் தினம் இன்று சிறப்பிக்கப்படுகிறது.
இந்த தினத்தன்று பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை கவிதையாக தனது தாய்க்கு சமர்ப்பித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister vijayabasker wish mothers day