அனல் பறக்கும் பிரச்சாரம் - குமரியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்புரை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் உள்ளிட்டோரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்து அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார். பின்னர் மாலை நான்கு மணி அளவில் வேனில் நின்றவாறு கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வேப்பமூடு பொன்னப்பநாடார் திடலில் மாலை ஐந்து மணி அளவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பிரச்சாரம் செக்கிறார். அதன் பின்னர் அவர் நெல்லை மாவட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin election campaighn in kanniyakumari


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->