அமைச்சர்,MLA-க்கள் ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு!
Minister resignation of MLAs? Excitement in Puducherry politics one after another
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். பாஜக-வை சேர்ந்த இவர், ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக மாநில தலைவராக MP செல்வகணபதி இருந்து வருகிறார்.இந்தநிலையில் வரும் 30-ஆம் தேதி புதிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அறிவிக்கப்பட உள்ளார்.
இந்தநிலையில் பாஜகவில் அதிரடி மாற்றம் கொண்டுவர முன்னதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சூரானா புதுவையில் முகாமிட்டுள்ளார்.இதையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சூரானாவிடம் காலை முதல் பாஜக அமைச்சர் மற்றும் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து 3-நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது .முன்னதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர் என்று தகவல் வெளிவந்துள்ளது . இதில் அவர்கள் மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சட்டபேரவை தலைவரிடம் கொடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும் புதிய நியமன உறுப்பினர்களாக GNS ராஜசேகர், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் நியமிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பாஜக அமைச்சர் ஒருவரையும் கட்சி மேலிடம் ராஜினாமா செய்ய கூறி உள்ளதாகவும், அந்த பதவி சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். பாஜக-வை சேர்ந்த இவர், ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார். காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக எம்.எல்.ஏ. ஜான் குமாருக்கு வழங்க கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Minister resignation of MLAs? Excitement in Puducherry politics one after another