மக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர் நாசர் ! - Seithipunal
Seithipunal


கோவில் பதாகை பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மருந்துகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 20 இலட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, கோவில் பதாகை பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மருந்துகளையும் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Nassar provided nutritional boxes to the people


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->