சசிகலாவின் உடல்நிலை குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 4 மீனவர்கள் பிரச்சினை மிகவும் துரதிஷ்டமானது, கண்டனத்துக்குரியது. ஒருபோதும் தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டுவது கிடையாது. மீன்களின் ஓட்டத்திற்கு ஏற்பவும், காற்றின் வேகத்தின் காரணமாக தான் தற்செயலாக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள்.

ஒருவேளை எல்லை தாண்டும் பட்சத்தில் இலங்கை அரசு உடனடியாக இந்திய கடலோர படையினர் மற்றும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு அவர்கள் சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, மீனவர்களை துன்புறுத்துவது போன்ற செயல்கள் ஏற்க முடியாத ஒரு விஷயம். மீனவர்களின் பிரச்சினை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசுவதாக உறுதியளித்துள்ளார். தற்போதைய கூட்டணி சுமுகமாகத் இருக்கிறது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக கூட்டணிக்கு இணைவதற்கு புதிய கட்சிகள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. வெற்றி பெற கூடிய கூட்டணி என்றால் அது அதிமுகதான். 

சசிகலா பூரண குணம் அடைய வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள எவரும் நினைக்கக்கூடிய விஷயம். இந்த வகையில் சசிகலா சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்பதை நாங்களும் நினைக்கிறோம் எனக் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister jayakumar press meet about sasikala health


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->