மோட்டார் பைக் மீது சரக்கு வேன் மோதி விபத்து.. வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இரு சக்கரம் வாகனத்தின் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம்  குஜிலியம்பாறை தாலுகா சின்னகவுண்டனூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூரிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது வெள்ளப்பாறை என்ற இடத்தில் அருகே வந்த போது அவருக்கு எதிரே வந்த சரக்கு வேன், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக  மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குஜிலியம்பாறை போலீசார் கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mini van and bike accident young man death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->