நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பால் வியாபாரி - கிருஷ்ணகிரியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஓசூர் அடுத்த எலுவபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபாலப்பா மகன் முனிராஜ். பால் வியாபாரம் செய்து வரும் இவர் பாகலுருக்குச் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது, அவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடந்த முனிராஜ் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

milk man murder in krishnagiri


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->