கடலூர்: சாப்பாடு சுவையில்லை என்று., மனைவியை அடித்து கொன்ற கணவன்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே பில்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற 77 வயது விவசாயிக்கு காளியம்மாள் என்ற 60 வயது மனைவி இருக்கின்றார். 

அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதுபோல நேற்று சாப்பிடும் பொழுது சாப்பாடு நன்றாக இல்லை என்றும் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

இந்நிலையில், அவரது மனைவி தண்ணீர் கொண்டுவர சற்று தாமதமானதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கடும் கோபமடைந்த தங்கவேல் மனைவி என்றும் பாராமல் அவரை சகட்டுமேனிக்கு அடுத்து தாக்கியிருக்கிறார். 

இதில் சுவற்றில் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து இருக்கின்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தங்கவேலு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

men killed his wife in cuddalore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->