கடலூர்: சாப்பாடு சுவையில்லை என்று., மனைவியை அடித்து கொன்ற கணவன்.!
men killed his wife in cuddalore
கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே பில்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற 77 வயது விவசாயிக்கு காளியம்மாள் என்ற 60 வயது மனைவி இருக்கின்றார்.
அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதுபோல நேற்று சாப்பிடும் பொழுது சாப்பாடு நன்றாக இல்லை என்றும் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், அவரது மனைவி தண்ணீர் கொண்டுவர சற்று தாமதமானதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கடும் கோபமடைந்த தங்கவேல் மனைவி என்றும் பாராமல் அவரை சகட்டுமேனிக்கு அடுத்து தாக்கியிருக்கிறார்.
இதில் சுவற்றில் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து இருக்கின்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தங்கவேலு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
men killed his wife in cuddalore