தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று முழு ஊரடங்கு.? வெளியாகப்போகும் அறிவிப்பு.!!
may be full lockdown for next sunday
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது.
இதனிடையே கடந்த 6 ஆம் தேதி முதல் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும், இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காணும்பொங்கல் அன்று முழு ஊரடங்கு அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
English Summary
may be full lockdown for next sunday