பெற்றோர் எதிர்ப்பை மீறிய திருமணம்…15 வயது சிறுமி கர்ப்பம்…! - இளைஞர் போக்சோவில் கைது
Marriage against parental opposition 15 year old girl becomes pregnant Young man arrested under POCSO Act
மதுரை மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (29). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அந்த சிறுமிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு மேற்கொண்ட மருத்துவ சோதனையில், அந்த சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
இந்த தகவல் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் பத்மா அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
குழந்தை பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியதாக, வெற்றிச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, போலீசார் வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறைந்த வயது சிறுமியுடன் திருமணம் செய்து கர்ப்பம் ஏற்படுத்திய சம்பவம், மதுரை மாநகரில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Marriage against parental opposition 15 year old girl becomes pregnant Young man arrested under POCSO Act