தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் பிறந்த தினம் இன்று...!!
Manonmaniam Sundaram Pillai birthday 2022
பெ.சுந்தரம் பிள்ளை :
நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார்.
இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891ஆம் ஆண்டு எழுதினார். அதில் இடம்பெற்ற நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ஆம் ஆண்டு அறிவித்தது.

பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை தி டென் தமிழ் ஐடியல்ஸ் என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
இவர் கு.ஆ.ரு.இ கு.சு.ர்இ ளு.ஆ.சு.யு.ளு, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளார். பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை 1897ஆம் ஆண்டு மறைந்தார்.
நிலக்கண்ணிகள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம் :
நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புறங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக்கூறவும் இத்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
English Summary
Manonmaniam Sundaram Pillai birthday 2022