#நீலகிரி : டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் சுட்டு பிடிப்பு.!
man tried to rob the Tasmac shop was shot and caught in Nilgiris
டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்கும் முயன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது கொள்ளையர்கள் ஆயுதங்களால் போலீசாரை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் கொள்ளையர் ஒருவருக்கு தொடையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தப்பு சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
man tried to rob the Tasmac shop was shot and caught in Nilgiris