கழிவு நீர் தொட்டியில் கிடந்த ஆண் பிணம்.. மதுபோதை ஆசாமிகள் வெறிசெயல்..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் அடையாளம் தெரியாத நபரை அடித்து கொன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் எதிரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த வழியே சென்ற மக்கள் இதனை கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று 4 பேர் அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்றதும், அடுத்தது வாங்கி வருவதில் கூட்டாளிகள் இடையே சண்டை ஏற்பட்டது தெரியவந்தது.

அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து மோதினார். மதுபோதையில் கோபத்தில் இருந்த அவர்கள் அந்த நபரை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு கழிவுநீர் தொட்டியில் போட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி காட்சி அவரை கைது செய்த காவல்துறையினர் கொலையான நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Murder Near chengalpattu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->