விநாயகர் சிலைக்கு காவலாக இருந்த இளைஞர் கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்தவரை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பாரதபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து பூஜை செய்துள்ளனர். அந்த விநாயகர் சிலைக்கு காவலாக ராஜேஷ் கண்ணா, கார்த்திக், மோகன்ராஜ் என்ற மூவர் காவலுக்கு இருந்து வந்துள்ளனர். அப்போது, மர்ம கும்பல் ஒன்று ராஜேஷ் கண்ணாவை அரிவாளால்  வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man Killed in Chengalpattu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->