பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான இளைஞர்.. தேனி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், கோம்பையை சேர்ந்தவர் விஜயரகுநாத். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.நேற்று சிங்காரநகர் பகுதியில் வேப்பமர கிளைகளை வெட்டி பராமரிப்பு பணி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற உயர் மின்னழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக உரசினார்.

இதில், தூக்கிவீசப்பட்ட அவரை மீட்ட அக்கம்பக்கதினர்    உடனடியாக அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man died in electric Shock


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->