சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தாயின் கள்ளகாதலன் மீது பாய்ந்தது போக்சோ.. தாயும் உடந்தையாக இருந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வந்திராயிருப்பு பகுதிகள் வசித்துவரும் சிறுமி ஒருவரை தாயின் காதலர் பாலியல் தொல்லை செய்துவருவதாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு புகார் வந்தது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது தாயின் காதலனான பாண்டி முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது உறுதியானது. இதுபற்றி சிறுமி தாயுடன் கூறிய போது அவர் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறக்கூடாது என கண்டித்ததோடு அடித்து துன்புறுத்தி உள்ளதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் காவல்துறையில் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தாய் மற்றும் அவரை காதலனைக் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for sexually abusing girl in Viruthungar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->