கோவையில் பரபரப்பு -  பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை -  அதிரடி கட்டிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


கோவையில் பரபரப்பு -  பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை -  அதிரடி கட்டிய போலீசார்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவ பிரதிநிதி ஒருவர் மனைவி மற்றும் 2 வயது மகளுடன் வசித்து உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இரண்டு  வயது சிறுமி நீண்ட நேரமாக அழுதுகொண்டே இருந்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாய் அந்த குழந்தையிடம் விசாரித்துள்ளார்.

இருப்பினும் அந்தக் குழந்தை விடாமல் அழுத நிலையிலேயே இருந்ததனால் சந்தேகமடைந்த தாய் குழந்தையை பார்த்த போது உடலில் காயம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

அங்கு குழந்தையை பரிசோதனை மருத்துவர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த குழந்தை வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தக் குழந்தையின் தந்தையே இரண்டு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 2 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for sexuall harassment to daughter in coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->