சென்னையில் நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது! யூடியூப் தொகுப்பாளினி பற்றி அவதூறு வீடியோ வழக்கில் அதிரடி! - Seithipunal
Seithipunal


அவதூறு புகார்: சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 'சமூகு மீடியா' யூடியூப் சேனல் தொகுப்பாளினி மானஸி (38), தனது புகைப்படம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பொய்யான தகவல்களுடன் கூடிய அவதூறு வீடியோவை 'அப் 24 X 7' யூடியூப் சேனலில் வெளியிட்டுப் பெண்மைக்குக் களங்கம் விளைவித்ததாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பல்வேறு பிரிவுகளில் வழக்கு: இப்புகாரின் அடிப்படையில், நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் பெயர் தெரியாத ஒரு நடிகர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகியவற்றின் கீழ் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் நடவடிக்கை & கைது: வழக்குத் தொடர்பாகக் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தாமோதரன் பிரகாஷ் (58) என்பவரை இன்று (16.09.2026) கைது செய்தனர்.

தொடர் விசாரணை: அவதூறு வீடியோ தயாரிப்பில் தொடர்புடைய பெயர் தெரியாத மற்றொரு நபரைப் பிடிப்பதற்கும், வழக்கு குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man Arrested for Publishing Defamatory YouTube Video Targeting Female Anchor in Chennai


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->