ஒரே மகள், மருத்துவராக்கிய பெற்றோரை உதறிவிட்டு காதலனுடன் ஓட்டம்.! தூக்கில் தொங்கிய பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


 
மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்துள்ள முக்கரம்பக்கம் ஊராட்சியின் மாம்பேடு சிற்றூரைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். விவசாயி பணி செய்து வரும் இவருக்கு வயது 60 ஆகிறது.  தாமரைச்செல்வன் மனைவி சரளா (வயது 55). 

இவர்களுக்கு அர்ச்சனா (வயது 28) என்ற மகள் உள்ளார். பல் மருத்துவரான அர்ச்சனா, செங்குன்றம் அருகே இரட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அர்ச்சனாவும், பெரியபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

ஆசையாக வளர்த்த ஒரே மகளை மருத்துவராக்கிய பெற்றோர்கள், தங்களின் விருப்பம் இன்றி திருமணம் செய்து கொண்டதால் கடும் மன வேதனையில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை தாமரைச்செல்வன் விவசாய பணிகளுக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் மின் விசிறியில் மனைவி சரளா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

மனைவி இறந்ததை தாங்கிக்கொள்ளமுடியாத தாமரைச்செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தாமரைச் செல்வனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், தாமரைச்செல்வன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசையாக வளர்த்த ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mampaadu daughter love marriage parents suicide


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->