விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமீன்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பனை ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் என்பவர் எட்டி உதைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பனை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து அவரை பணியிட நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி நேற்று உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஊராட்சி செயலர் தங்கபாண்டியின் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் திடீரென தங்கபாண்டியன் தலைமறைவானார். அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட போலீசார் 3 தனிப்படைகளை அமைத்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விவசாயி அம்மையப்பன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஊராட்சி செயலாளர் தாக்கியதில் விவசாயி அம்மையப்பனுக்கு வெளிக்காயம் ஏதும் ஏற்படாதது காரணம் காட்டி ஊராட்சியில் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC granted anticipatory bail to panchayat secretary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->