மாநாடு செகண்ட் ஷோ பார்த்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்.!
madurai pc murugan arrest
மதுரை : செல்லூர் அருகே உள்ள திரையரங்கில், செகண்ட் ஷோ 'மாநாடு' திரைப்படம் பார்த்துவிட்டு இரவு ஒரு மணிக்கு வந்த பெண் ஒருவரையும், அவரின் நண்பரையும் வழிமறித்த, ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் என்பவர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும், அவர்களை மிரட்டி 11,000 பணம், செல்போன், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு, அந்த பெண்ணை தான் பத்திரமாக கொண்டு அழைத்து வீட்டில் விடுவதாக கூறி, ஆண் நண்பரை மட்டும் அங்கிருந்து அனுப்பி உள்ளார்.
அவர் சென்ற உடன், அந்த பெண்ணை வீட்டில் கொண்டு வீட்டில் கொண்டு விடாத காவலர் முருகன், அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டி அந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்து காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் காவலர் முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் காவலர் முருகன் செய்த கொடூரம் உண்மை என தெரியவரவே, நேற்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்தும் உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரோந்து பணியில் பாதுகாப்புக்கு இருக்க வேண்டிய காவலர் ஒருவரே பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், வழிப்பறியில் ஈடுபட்டதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
madurai pc murugan arrest