காதலித்து கம்பி நீட்டி.. சிறையில் தாலி கட்டிய இளைஞர்.! மதுரையில் பரபரப்பு சம்பவம்.!
Madurai Men cheated and marriage after jail
இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் இளைஞர் ஒருவர் கைதாகி அந்தப் பெண்ணை சிறை வளாகத்திலேயே திருமணம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற இளம் பெண்ணை கோட்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அழகுராஜா என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கு அழகு ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண் மீண்டும், மீண்டும் வற்புறுத்திய நிலையில் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, ரம்யா போலீசில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு மேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இத்தகைய நிலையில், அவர் பிணையில் வெளிவந்து சிறை வளாகத்தில் இருக்கும் காளியம்மன் கோவிலில் அவர் காதலித்து கைவிட்ட பெண் ரம்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Madurai Men cheated and marriage after jail