நாட்டு வெடிகுண்டுகளில் தப்பிய மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று இரவு 10 மணியளவில் மாடம்பாக்கம் அருகே ஆதனூர் பகுதியில் உள்ள ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் மற்றும் மூன்றாவது வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்கள் பின்னால் வந்த மர்மகும்பல் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. அவர்கள் வீசிய குண்டுகளில் ஒன்று மட்டும் வெடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் அங்கு இருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னால் தொடர்ந்து மர்ம கும்பல் வெங்கடேசனை தலை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் படுகொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோன்று கடந்த ஆண்டு மாடப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சதாம் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து வெங்கடேசனை கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்பொழுது தலை மற்றும் கை, கால்களில் சிறிய வெட்டு காயங்களுடன் வெங்கடேசன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் படுகொலை சம்பவம் மாடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madampakkam panchayat president hacked to death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->