ஸ்டாலினை மிஞ்சும் அளவுக்கு புலம்பிய அமைச்சர் ரகுபதி! - Seithipunal
Seithipunal


திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது ஒப்புதல் வாக்குமூலம்! 

திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் செயின் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சியின் தலைவராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை பொது செயலாளராக கனிமொழி, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அறிவிப்பினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். 

பிறகு பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின் கட்சி மூத்த நிர்வாகிகளின் நடவடிக்கைகளை நினைத்து புலம்பினார். ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது பிரச்சனை ஏதேனும் இருக்கிறதா என்று கண்விழிப்பதாகவும் இரவில் தூக்கம் தொலைத்ததாகவும் பேசி இருந்தார். இதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் பல்வேறு கோரிக்கைகளையும் குறைபாடுகளையும் எடுத்துரைத்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ரகுபதி திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது. முரசொலி பத்திரிகையில் இரண்டு பக்கம் போதாது மூன்று பக்கம் செய்தி வெளியிடும் அளவுக்கு என்னிடம் புகார்கள் வந்துள்ளன என பகிரங்கமாக கூட்டத்தில் பேசியுள்ளார். இதனால் திமுகவில் அதிக அளவில் உட்கட்சி பூசல் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதுகுறித்து செய்திகள் வெளியிட வேண்டாம் என செய்தியாளர்களைப் பார்த்து அமைச்சர் ரகுபதி கைகூப்பி கேட்டுக் கொண்டது பொதுக்குழுவில் ஸ்டாலின் புலம்பியதையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lot of internal conflict in the DMK says Minister raghupathi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->