மக்களவைத் தேர்தல் எதிரொலி: திமுக சார்பில் குழுக்கள்!  - Seithipunal
Seithipunal


தி.மு.க. தலைமை கழகம், மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக 3 குழுக்களை அமைத்துள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி உட்பட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை மேற்பார்வையிட மற்றும் ஒருங்கிணைக்க கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தி.மு.க சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் இ. பெரியசாமி, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கான அறிவிப்பை தி.மு.க கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் இந்த குழுக்களில் துறைமுகம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lok Sabha elections DMK behalf groups


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->