திருப்பூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
Laborer killed in vehicle collision
திருப்பூர் மாவட்டத்தில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சாலக்கடை நடுவலசு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தேவராஜ் (55). இவர் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சாலக்கடை அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
பின்பு கடையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு, தேவராஜ் வீட்டிற்கு செல்வதற்காக மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தேவராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Laborer killed in vehicle collision