கிருஷ்ணகிரியில் இரவுப் பணியில் இருந்த தலைமை காவலர் சாலை விபத்தில் பலி!
krishnagiri Police cop accident death
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கம், தலைமைக் காவலர் மில்டன் மற்றும் பயிற்சி காவலர் சுகுமார் ஆகியோர் ஜூலை 28-ஆம் தேதி இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் கோட்டூர் மாரியம்மன் கோயிலில் தணிக்கை செய்து முடித்த பின்னர், மத்தூருக்குள் செல்லும் வழியில், மில்டன் மற்றும் சுகுமார் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அந்நேரத்தில் கர்நாடக மாநிலம் குடகிலிருந்து புதுச்சேரிக்கு கோவில் சிலைக்காக கிரானைட் கற்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியின் மீது, அதன் பின் வந்த இரும்புப் பாரம் ஏற்றிய மற்றொரு லாரி மோதியது. இந்த மோதி தள்ளிய டாரஸ் லாரி, அருகில் சென்ற காவலர்களின் பைக்கில் மோதியது.
இதில் தலைமை காவலர் மில்டன் நிகழ்விடத்திலேயே பலியாகினார். பயிற்சி காவலர் சுகுமாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் சென்று நிலைமையினை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அர்ப்பணிப்புடன் பணியில் இருந்த போலீசாரில் ஒருவரை இழந்த சம்பவம் காவல் துறையை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
krishnagiri Police cop accident death