பொள்ளாச்சியில் பயங்கரம்! ஒருதலை காதல்! வீடு புகுந்து மாணவி குத்தி கொலை! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 19 வயது கல்லூரி மாணவி ஒருதலைக் காதல் காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

அதே பகுதியை சேர்ந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் பிரவீன் என்பவருடன் மனைவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பிரவீன் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மாணவி காதலை ஏற்க மறுக்க, இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பிரவீன், மாணவி வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் குத்தி உள்ளார்.

இரத்தவெறியுடன் மயக்கமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே குற்றவாளி பிரவீன், கோவை மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai pollachi college student murdered one side love


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->