கோவை : குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் செல்ல தடை.! - Seithipunal
Seithipunal


கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளம் கோவை குற்றாலம். இங்கு ஏராளமான வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வாகனங்களில் அழைத்து செல்வதற்கு வனத்துறையினர் தனியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடகிழக்கு  பருவமழை தீவிரமடைந்ததால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai Kutralam waterfalls flood picnicers not allowed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->