கவரைப்பேட்டை ரயில் விபத்து! எஃப்ஐஆர்-ல் குறிப்பிட்ட நபர்களின் பெயரா? பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 4 பிரிவுகளில் கீழ் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில், தற்போது கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கவரைப்பேட்டையில் கிரீன் சிக்னல் போட்ட பின்னர் எக்ஸ்ப்ரஸ் ரயில் விபத்துக்குள்ளானதாக எஃப்ஐஆர்-ல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக மற்றும் கவனக் குறைவாக, ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த எஃப்ஐஆர்-ல் குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை தெரிவித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kavaraipettai Train Accident FIR


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->