கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்.. கலவரமான போராட்ட களம்.. போலீசார் வாகனத்திற்கு தீ வைப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தின் நிலைமை கைமீறி சென்று கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பள்ளியின் மீது கல்வீச்சு, செருப்பு வீச்சு தடியடி, பள்ளி சூறை என அந்த இடமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.

காவல்துறையினரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். மேலும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallakuruchi school girl murder protest


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->