கலாஷேத்ரா கல்லூரிக்கு முன் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு! குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்! - Seithipunal
Seithipunal


கலாஷேத்ராவின் முன்னாள் கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் ஹரி பத்மன் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த முதுகலை மாணவி தன்னுடைய கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காமல் ஊருக்கு திரும்பியது, ஆசிரியர் ஹர்பத்மன் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் ரீதியான பிரச்சினைகளால் தான் என்று போலீசார் விசாரணையில் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை மாதவரத்தில் அவரது தோழி வீட்டில் பதுங்கி இருந்த நடன ஆசிரியர் ஹரி பத்மனை கடந்த வாரம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எப்.ஐ,பி , மற்றும் AIDWA போன்ற அமைப்புகள் இன்று காலை 10:30 மணிக்கு கல்லூரி வளாகம் முன் போராட்டம் நடத்த அறிவித்திருந்தது.

இதை அறிந்து அங்கு விரைந்த சென்னை போலீசார் போராட்டம் நடத்த தடை விதித்து மறுப்பு தெரிவித்தனர். 

தடையை மீறி போராட்டம் நடத்த 20 க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட்டது. பின்னர் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kalaseshtra college opposite protest police arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->