பதில் சொல்ல முடிலனா எதற்கு வழக்கு போடணும்? அமலாக்கத்துறையை ரவுண்டு கட்டிய நீதிபதி!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு  ஜாமீன் கோரி 3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிஅல்லி உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணை போதும் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் கடுப்பான நீதிபதி அல்லி அமலாக்கத்துறை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இன்று நடைபெற்ற விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழங்க கோரி மூன்று முறை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் மீது பதில் தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்காக வழக்கு தொடர்ந்தீர்கள் என அமலாக்கத்துறை தரப்பிடம் நீதிபதி அல்லி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

judge displeased on ed in senthilbalaji bail case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->