திருச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - Seithipunal
Seithipunal


திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற ஆண்,பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி ஜமால் முகம்மது கல்லூரியில் வருகின்ற  30.06.18 சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் திருச்சி மாவட்ட பகுதிகளைச் சார்ந்த 8,10,12  ஆம் வகுப்பு முதல்  பட்டயப்படிப்பு ஐ.டி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம்  சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் அசல் மற்றும் நகல் கல்விச்சான்றுகள், ஆதார் மற்றும் போட்டோ கொண்டு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job fair in trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->