தமிழகத்தில் இன்று தேர்தல் வைத்தால் அதிமுக ஆட்சிதான் - ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் இருப்பதாகவும், இப்போது தேர்தல் நடந்தால் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவித்தாவது, "தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், பிரவுன் சுகர், மெத்து, ஹெராயின் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.

சட்டவிரோதமான செயல்களும் இந்த விடியாத அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடியவர் விழிப்போடு இருந்து கட்டுப்படுத்தி, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

போதை அடித்துக்கொண்டு வியாபாரிகள் மீதுதான் முதல் தாக்குதல் நடைபெறுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட நீங்கள் பார்த்து இருப்பீர்கள், கஞ்சா அடித்து விட்டு என் கடையில் வந்து தொல்லை கொடுப்பதினால், என் கடையை நிரந்தரமாக இழுத்து மூடுவதாக ஒருவர் கடையை இழுத்து மூடி உள்ளார். 

இந்த திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது. குறிப்பாக போதையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் இன்றைக்கு தமிழக அரசு திணறிக் கொண்டிருக்கிறது.

இதற்கு வணிகர்களும், பொது மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்ற நிலை தான் இன்று தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழகத்தில் போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். 

அது இந்த திமுக ஆட்சியில் ஸ்டாலினால் கண்டிப்பாக முடியாது. ஸ்டாலினை பொறுத்தவரை அவர் ஒரு நிர்வாக திறனற்றவர், நிர்வாகம் செய்யவே அவர் ஒரு தகுதி இல்லாதவர். அவர் ஒரு பொம்மை ரிமோட் முதலமைச்சர். நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாத ஒரு முதலமைச்சர். அவருக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தமிழகம் பெரிய சிரமத்தில் சிக்கி உள்ளது. சட்ட ஒழுங்காக பாதிக்கப்பட்டுள்ளனர் மக்கள்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து சர்வ சாதாரணமாக நடக்கின்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

மொத்த அமைச்சரவையும் மாற்ற வேண்டும். முதலில் ஸ்டாலின் தான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும். மீண்டும் தற்போது தமிழகத்தில் தேர்தல் வைத்தால் அதிமுக ஆட்சி தான் தமிழ்நாட்டில் வரும். அந்த அளவுக்கு இந்த திமுக ஆட்சியால் வெறுத்துப் போய் உள்ளார்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeyakumar say TN Law and Order Worst DMK Govt Fail


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->