தமிழரின் வீரபடையாட்டம் ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் கோலாகல பொங்கல் தொடக்கம்...! - Seithipunal
Seithipunal


தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா, தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகள் பிரபலமாக விளங்குகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் நாளைத் தொடங்கி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியுள்ளது.அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை பற்றிய விவாதம், கிராமக் கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாய சங்கத்திடையே கடுமையாக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களின் பின்னர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகமே நேரடியாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் அரைபார்வை காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதனால், வீரர்கள் மட்டும் அல்லாது பார்வையாளர்களுக்கும் பெரும் உற்சாகமும், பரபரப்பும் ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jallikattu heroic sport Tamils festive Pongal celebrations begin Avaniapuram


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->