கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க-வுக்கு இடமா...? - செங்கோட்டையன் கொடுத்த அதிரடி பதில்...! - Seithipunal
Seithipunal


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது முக்கிய அரசியல் தகவல்களை பகிர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது,“முதலமைச்சர் விஜய் என்ன தீர்மானிக்கிறாரோ, அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கெல்லாம் உள்ளது. அமைச்சரவை அமைப்பு என்பது அரசியல் சூழ்நிலைக்கேற்ப மாற்றமடையும் இயல்புடைய ஒன்று.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் முதலில் 7 பேரை மட்டுமே அமைச்சர்களாக நியமித்தார்.

அதன் பின்னர் படிப்படியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு ஆட்சி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது.அதேபோன்று தற்போதைய ஆட்சியிலும் கட்டம் கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியது முதல்-அமைச்சரின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே அந்த தீர்மானத்தை அவர் தான் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள் வழங்கப்படலாம் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். இதுவரை நாங்கள் எந்த எண்ணிக்கையையும் வெளிப்படுத்தவில்லை” என்று நகைச்சுவை கலந்த பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there place AIADMK coalition government Sengottaiyan dramatic response


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->