முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட பிறந்த குழந்தை.. குழந்தையின் பெற்றொர் குறித்து தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை முட்புதரில்  வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், வேலிப்பட்டி என்ற கிராமத்தில் முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை  தொப்புள் கொடி அறுப்படாத நிலையில், கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த அந்த பகுதி மக்கள்  காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தை கடத்தி வரபட்டாடா? அல்லது குழந்தையின் தாய் விட்டு சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் இன்று குழந்தை பெற்றவர்களின் விபரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Infant Founded in Road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->