அதிகரித்து வரும் ஒகேனக்கல் நீர்வரத்து... எவ்வளவு கன அடி தெரியுமா? - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் காவிரி கரையோரங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8000 கன அடியாக வந்தது.

மேலும், தமிழக எல்லை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரட்டி, ஊட்டமலை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.

இதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 9,500 கன அடியாக தண்ணீர் வந்தது. அதைத்தொடர்ந்து, 9 மணி நிலவரப்படி நீர்வரத்து 14000 கனஅடியாக அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக ஐந்தருவி,மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்தும்,மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்தும் மகிழ்ந்தனர். மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

increasing flow water from Hogenakkal Do you know how many cubic feet


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->