17 வயது மாணவியை சீரழித்த 16 வயது மாணவன்.! பள்ளி பருவ நாடக காதலால் அரங்கேறிய விபரீதம்.!! பிறந்த பெண் குழந்தை..!!
in tirupur girl rapped by drama lover she now delivery girl baby
பெண்கள் பல விதமான முறையில் இன்றைய காலங்களில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இளம் வயதிலேயே நாடக காதல்., பாலியல் தொல்லை என்று பல விதமான பிரச்சனையில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பெரும் போராட்டத்தை போராடி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்., பள்ளியில் பயின்று வரும் 17 வயதுடைய மாணவி குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் கனகா (வயது 17., பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., இதே பள்ளியில் பதினோராம் வகுப்பில் சரவணன் என்ற மாணவன் பயின்று வந்துள்ளான். இந்த சமயத்தில்., இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., சரவணன் கடந்த வருடத்தின் பாதியில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு., மாணவியுடன் கொண்ட காதலை கைவிட மறுத்து., அவ்வப்போது மாணவியுடன் சுற்றி வந்துள்ளான். இந்த நிலயில். மனைவியின் பெற்றோரும் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சமயத்தில்., இதனை உபயோகம் செய்து கொண்ட நாடககாதல் காம கொடூர மாணவன் மாணவியின் இல்லத்திற்கு சென்று வந்துள்ளான்.
இந்த சமயத்தில்., காதலனின் நாடக காதல் அரங்கேற்றதால் இருவரும் தனிமையில் இருந்ததன் விளைவாக மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதன் காரணமாக மாணவியின் வயிறு வீக்கமடைவே,, இதனை வெளியில் கூறாத மாணவி பள்ளிக்கு எப்போதும் போல சென்று வந்துள்ளார். இந்த தருணத்தில்., மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்படவே., இதனால் பதறிப்போன பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.
மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும்., அவருக்கு சிறிது நேரத்தில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்., சிறிது நேரத்திலேயே மாணவிக்கு பெண் குழந்தை பிறக்கவே., பெற்றோர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாத வண்ணம் இருந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., மாணவி தனது காதலனை கூறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., நாடகக்காதல் காம கொடூரன் சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in tirupur girl rapped by drama lover she now delivery girl baby