17 வயது சிறுமியை நாடக காதலால் ஏமாற்றி அத்துமீறிய காம கொடூரன்..! நிர்கதியாய் பேருந்து நிறுத்தத்தில் தவித்த சிறுமி..!!
in thirupur girl kidnapped drama love and sexual harassment
நாம் வாழும் உலகில் பல விதமான துயர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் துயர சம்பவங்களில் நம்மை பேரும் அச்சத்திற்கும்., கோபத்திற்கும் உள்ளாக்குவது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்த செய்திகள் வெளியாகும் போதுதான். இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.எம்.எஸ். நகர் பகுதியை சார்ந்த 17 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில்., அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து மயமாகிய நிலையில்., இவரை காத்து தேடி அலைந்த பெற்றோர்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
Tamil online news Today News in Tamil
இந்த பிரச்சனை குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சிறுமியை காவல் துறையினர் மீட்டனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட்ட விசாரணையில்., திடுக்கிடும் தகவலானது வெளிவந்துள்ளது.
அங்குள்ள முத்தூர் மொட்டாங்காட்டை பகுதியை சார்ந்தவர் ஐபுதீன் (வயது 22). இவனுக்கும் - சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது., நட்பு ரீதியாக தொடர்ந்தது வந்த நிலையில்., நாடக காதல் காம கொடூரன் சிறுமிக்கு திருமண ஆசை காட்டி., சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமியை காவல் துறையினர் தேடுவதை அறிந்து அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிர்கதியாய் விட்டு சென்றுள்ளான்.
இதனை அறிந்ததும் அதிர்ச்சிக்குள்ளான காவல் துறையினர் ஐபுதினின் மீது வழக்குப்பதிவு செய்து., போக்ஸோ சட்டத்தின் கீழ் காம கொடூரனின் மீது வழக்குப்பதிவு செய்து கயவனை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupur girl kidnapped drama love and sexual harassment