ஆவணமில்லா பணம் பறிமுதல்...! பட்டினப்பாக்கத்தில் ரூ.1.5 லட்சம் கைப்பற்றிய காவலர்கள் ...!
Undocumented money seized Police seize 1point5 lakh Pattinapakkam
சென்னையின் பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை அருகே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.நேற்று முன்தினம் இரவு தீவிரமாக நடத்தப்பட்ட சோதனையின் போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது, காரில் பயணம் செய்த நபரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.50 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பணத்துடன் இருந்தவர் மியான்மரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான ராஜு என்பதும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
எனினும், பணத்திற்கு தேவையான சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், அந்த முழுத் தொகையும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Undocumented money seized Police seize 1point5 lakh Pattinapakkam