வளைகாப்பு நிகழ்ச்சியில் சண்டை.! கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு.. அரங்கேறிய பெரும் சோகம்.!!
in cudallore girl attempt suicide when pregnancy
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ராமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் பாலா. இவரது மகளின் பெயர் ஜெயஸ்ரீ (வயது 23). ஜெயஸ்ரீ புதுச்சேரியில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சென்று வந்த நிலையில்., அப்பகுதியை சார்ந்த அருண்ராஜ் என்பவருடன் பழக்கமானது ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு முடித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து முடித்துள்ளனர்.
பின்னர் திருமணம் முடிந்ததும் 5 ஆவது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்ற நிலையில்., மணமகன் இல்லத்தினர் சார்பாக ஜெயஸ்ரீக்கு தங்க வளையல் போட சொன்னதாக தெரிகிறது.
இந்நிலையில்., நிகழ்ச்சியன்று தங்க வளையல்கள் போடாமல் இருந்ததன் காரணமாக இரண்டு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதை அடுத்து., ஜெயஸ்ரீயுடைய சகோதரர் மணமகன் தரப்பில் உள்ளவரை தாக்கியுள்ளார்.
இந்த சண்டைக்கு பின்னர் இரு வீட்டாரும் சமாதானமான நிலையில்., தனது தாயாரின் இல்லத்திற்கு ஜெயஸ்ரீ சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற சில நாட்களில் திடீரென ஜெயஸ்ரீ தூக்கிட்டு நிலையில்., இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜெயஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறியளவே., இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore girl attempt suicide when pregnancy