காலி பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்டும்..சுகாதார ஊழியர் சங்கங்ம் போராட்டம்!
Immediate filling of vacancies is necessary Health workers unions are protesting
காலியாக உள்ள அனைத்து Cadre களிலும் உள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின்( CHEA ) சார்பில் மிஷன் வீதி, சம்பா மாதா கோவில் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள அனைத்து Cadre களிலும் உள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் , நர்சிங் அலவன்ஸ் மற்றும் நோயாளி கவனிப்பு படி ஆகியவற்றின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் , அனைத்து பதவிகளையும் (CADRE Restructure) மறுசீரமைப்பு செய்ய வேண்டும்,
தற்போதைய சுகாதார கட்டமைப்புக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு / MACP வழங்க * நடவடிக்கை எடுக்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் NHM ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
பணி நிரந்தரம் செய்யும் வரை சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,
மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற வாக்குறுதி அடிப்படையில் , NHM மற்றும் ஆஷா ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆஷா ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு, மருத்துவ மற்றும் மகப்பேறு விடுப்பு , பணி நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும் ,
சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் அனைவருக்கும், மாண்புமிகு . முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற வாக்குறுதி அடிப்படையில் , ஒரு முறை தளர்வு அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் செய்தனர்.மேலும் இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
English Summary
Immediate filling of vacancies is necessary Health workers unions are protesting