கள்ளத்தொடர்பு.. ஆத்திரம்.. பெண்ணின் கழுத்தை இறுக்கி கொன்ற கள்ளக்காதலன்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பை கைவிடாததால் பெண்ணின் கழுத்தை தூண்டாமல் இறுக்கி கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மாதேஸ்வரன்(48). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், மாதேஸ்வரனுக்கும், அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால் மாதேஸ்வரன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, ஷெகனாஷுடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து ஷெகனாஷுக்கு, வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாதேஸ்வரன் ஷெகனாஷை கண்டித்துள்ளார்.

இருப்பினும் அந்த வாலிபருடன் தொடர்ந்து ஷெகனாஷ், பழகி வந்ததால் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், ஷெகனாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், ஷெகனாஷின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாதேஸ்வரனை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illegal lover who murder a woman in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->