நாகை அக்னீஸ்வரர் கோயில் சிலை திருட்டு! நெதர்லாந்தில் ஏலம்... துரிதமாக செயல்பட்ட இந்திய தொல்லியல் துறை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் விரைவான நடவடிக்கையால், நெதர்லாந்தில் ஏலம் போக இருந்த கண்ணப்ப நாயனார் சிலை நின்றுவைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோயிலில் இருந்த இந்த உலோகச் சிலை, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. இதுதொடர்பாக அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சிலை நெதர்லாந்தில் ஏலத்திற்கு தயாராக இருப்பதாக அறிந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, அந்நாட்டு காவல்துறையுக்கும் இந்திய தொல்லியல் துறைக்கும் அவசரமாக தகவல் அனுப்பியது. அதனடிப்படையில், அந்நாட்டு அதிகாரிகள் செயல்பட்டு, ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த சிலை நெதர்லாந்தின் வெளியுறவுத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படுகிறது. அதனை திருப்பிக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் இந்திய அரசு வழியாக விரைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Idol Theft TN Police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->